சட்டவிதிகளை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்… மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
சட்டவிதிமுறை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழர்களின் கலாச்சார சின்னமான ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள சட்டவிதிமுறை நீக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டு நடத்த இடையூறாக உள்ள சட்டவிதிகளை நீக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். பண்டிகை நெருங்குவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கலுக்கு ஒரு வாரமே உள்ளதால் உடனடியாக நடவடிக்கையை தேவை என்றும் குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், தமிழக மக்களின் உணர்வு, ஆதரவை உணர்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான அவசரக் சட்டத்தை பிறப்பிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மோடியிடம் கோரியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் கலாச்சாரத்துடனும் சமயத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது என்று கூறியுள்ள முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது தமிழக மக்களுக்கு கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காட்சிப்படுத்த தடைவிதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து காளையை நீக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications