மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று காலை, நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 பேரை இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரி ஓபிஎஸ், மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இன்று சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மீது வழக்கு பதிவின்றி உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே சிறையில் உள்ள 35 மீனவர்கள் மற்றும் 120 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்றும் ஓபிஎஸ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications