Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்பெஷல் பால்கோவா!!

Subscribe to Oneindia Tamil

பாலில் தயாரிக்கப்படும் ஒரு உன்னதமான, சுவையான இனிப்பு பண்டம் தான் இந்த பால்கோவா. பல ஊர்களில் பல வகையான பால்கோவா இருப்பினும் அது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு ஈடு ஆகாது. அப்படி ஒரு பக்குவம், சுவை, மண்மணம் மாறாத ஒரு தன்மை இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு மட்டும் தான் இருக்கிறது

அது என ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவவிற்கு மட்டும் அப்படி ஒரு சிறப்பு?

ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது திருவில்லிப்புத்தூர் ,தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உட்பட்ட ஒரு நகராட்சி ஆகும். இது தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த ஊர். இங்கே இரண்டு முக்கிய தொழில்கள் காலம் காலமாக செய்து வருகின்றன. அது தான் நெசவு தொழில் மற்றும் பால்கோவா தயாரிப்பது. இவர்கள் இது ஒரு வேலையாக அல்ல, பாரம்பரியமாக ஒரு கலாச்சாரமாக கடைப்பிடித்து வருகின்றன. முக்கியமாக இங்கு தயாரிக்கப்படும் இந்த உன்னதமான பால்கோவை வெளிநாட்டில் அதிகமாக ஏற்றுமதி செய்கின்றன.

 Order Srivilliputhur Palkova Online and get delivered in less than 24 Hours

பால்கோவா:

இங்கே பால் பண்ணைகள் அதிகமாக காணப்படுகின்றன. பால் கோவா, பால் அல்வா, பால் கேக், சர்க்கரை சேர்க்காத பால் கோவா, கேரட் அல்வா போன்றவை இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. பால் முக்கியமாக நமக்கு கிடைக்கும் நேரம் அந்த 5 - 11 மற்றும் 6 - 12 மணி ஆகும். அதே நேரத்தில் இவர்கள் அதிக அளவில் பால்கோவை செய்கின்றன. இதில் என்ன ஒரு சிறப்பு என்றால், அன்றைக்கு தயாரிக்கப்படும் கோவா அன்றைக்கே காலி ஆகிவிடும். அது தான் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் ஒரு தனி சிறப்பு. குடிசைத் தொழிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் முழுதும் விரிந்து பரவியுள்ளன பால்கோவா நிறுவனங்கள்.

சாதரணமாக பால்கோவா நல்ல தரத்திலும், நல்ல சுவையிலும் வேண்டுமெனில் சுத்தமான பால் வேண்டும் அதுவும் தண்ணீர் கலக்காத பாலாக இருக்க வேண்டும். அந்த சுத்தமான பால் ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் கிடைக்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்முறை:

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 100 கிராம்.

செய்முறை:

அடி கனமான ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அந்த பாத்திரத்தில் பாலையும், சர்க்கரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இதில் கவனிக்க கூடிய விஷயம் என்ன வென்றால் தீ மிதமாக இருக்க வேண்டியது. பால் நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது தீயை இன்னும் குறைத்து விடவும். சுற்றிலும் படியும் பால் ஆடைகளை வழித்து பாலிலேயே போடவும். லேசான மஞ்சள் நிறத்தில் நல்ல வாசனை வரும் போது, பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இறக்கி, வேறு பாத்திரத்தில் மாற்றிவிடவும். சற்று தளர்ந்த நிலையில் இருக்கும்போது பால்கோவாவை அடுப்பிலிருந்து இறக்கி விடவேண்டும். ஆறியதும் இன்னும் இறுகும் என்பதால் அடுப்பிலேயே இறுக விட்டால் மிக கெட்டியாக ஆகிவிடும்.

இதை நீங்கள் செய்யும்போது கவனிக்கவேண்டியவை என்ன வென்றால், பால் அதிக கெட்டியாகவோ, அதிக தண்ணீராகவோ இருக்கக் கூடாது. அது மட்டும் அல்லாமல் கை படாமல் செய்ய வேண்டும், அப்படி கை பட்டால் இந்த பால்கோவா கெட்டியாகிவிடும். சுத்தமான பாலாக இருக்க வேண்டும். அனால் இப்போது நமக்கு கிடைக்கும் பால்களோ தண்ணீர் கலந்து தான் கிடைக்கிறது. அதில் நீங்கள் செய்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைக்கும் பால்கோவா அளவிற்கு அந்த பக்குவமும், சுவையும் கிடைக்காது.

இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த பால்கோவை, ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிப்பதை போன்ற நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+