For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆறுதல் கூறிய ரஜினி, மேனகாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சிறையில் இருந்து வெளியே வந்த தனக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதினார். அதில் அவர், மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்றிருந்தார்.

ரஜினி தவிர பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரான மேனகா காந்தியும் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பி வாழ்த்தினார்.

மேனகா

மேனகா

மேனகா தனது கடிதத்தில், இப்படி நடந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். இந்த பிரச்சனை அனைத்தும் தீர்ந்து நீங்கள் மீண்டும் நிர்வாகம் செய்வீர்கள் என்று தெரிவித்திருந்தார்.

நன்றி கடிதம்

நன்றி கடிதம்

தன் மீது அக்கறை காட்டி கடிதம் எழுதிய ரஜினி மற்றும் மேனகாவுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ஆயுள்

ஆயுள்

ஜெயலலிதா ரஜினிகாந்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, உங்கள் கடிதம் கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்களின் அன்புக்கு மிகவும் நன்றி. ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் வெற்றிகளை அளிக்க நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பிசி

பிசி

மத்திய அமைச்சராக பிசியாக இருக்கும் போதிலும் என்னை பற்றி நினைக்க நேரம் ஒதுக்கி எனக்கு ஆறுதல் கூறியதற்கு நன்றி என ஜெயலலிதா மேனகாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

English summary
Jayalalithaa has thanked Rajinikanth and union minister Maneka Gandhi for their concern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X