கூடுவாஞ்சேரி அருகே விபத்து : 100 இரு சக்கர வாகனங்கள் தீக்கிரை!
கூடுவாஞ்சேரி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.
Recommended Video
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் எரிந்து தீக்கிரையாகின. இந்த சம்பவம் குறித்து நந்திவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
விபத்து குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 வாகனங்கள் எரிந்து சாம்பலான நிலையில், மீண்டும் தீவிபத்து ஏற்பட்டிருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.