For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக அரசின் பொருளாதார நிலைமைக்கு ப.சிதம்பரம் திடீர் பாராட்டு
சிவகங்கை: தமிழக அரசின் பொருளாதார நிலைமை பாராட்டும் வகையில் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சாலைகிராமம் மற்றும் எஸ்.ஆர். பட்டினம் ஆகிய ஊர்களில் தேசிய மையமாக்கப்பட்ட வங்கி கிளைகளை தொடங்கி வைத்துப் ப.சிதம்பரம் பேசியதாவது:
மக்கள் பொருளாதார்த்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் பணப்பரிமாற்றமும் பணப் பயன்பாடும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழக அரசின் பொருளாதார நிலைமை பாராட்டும் வகையில் இருக்கிறது. எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் வங்கிகளில் கடன் வாங்கலாம்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மொத்தம் இதுவரை 25 லட்சம் பேருக்கு ரூ 54 ஆயிரம் கோடிக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
Comments
English summary
Union Finance Minister P Chidambaram today said that the "easy way" for people to understand economics was to study the transaction or usage of money in the country, as had been exemplified by Tamil Nadu, whose economy he averred was in good shape.
Story first published: Monday, February 3, 2014, 14:46 [IST]