எழுத்து இயக்கம் ஏன்? - ப சிதம்பரம் விளக்கம்
சென்னை: ப சிதம்பரம் தொடங்கியுள்ள எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டு உதவுவதற்கான ‘எழுத்து' தமிழ் இலக்கிய அமைப்பை புதிதாகத் தொடங்கி உள்ளார்.
அந்த அமைப்பிற்கான அறிமுக விழா, சென்னை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில், ‘எழுத்து' இலக்கிய அமைப்பின் அறங்காவலர்களான தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, முத்தையா ஆகியோரை ப.சிதம்பரம் அறிமுகம் செய்து வைத்தார்.
முத்தையா ‘எழு' என்ற தலைப்பிலும், மு.மேத்தா ‘எழுது' என்ற தலைப்பிலும், வைரமுத்து ‘எழுத்து' என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
விழாவில் சிதம்பரம் பேசுகையில், "எழுத்து' தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில், இளம் தமிழ் எழுத்தாளர்கள் படைக்கும், படைப்புகளை புத்தகங்களாக வெளியிட இருக்கிறோம். இளம் எழுத்தாளர்கள் அனுப்பும், படைப்புகளை நடுவர் குழு ஒன்று ஆய்வு செய்து, அதன் பிறகு, அறங்காவலர்கள் ஒப்புதல் அளித்து புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 புத்தகங்கள் வெளியிடுவது என திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகம் வெளியிடப்படும் நாளிலேயே, படைப்பாளர்களுக்கு புத்தகத்திற்கான காப்புரிமை முழுவதும் வழங்கப்பட்டு விடும்.
புத்தகத்தின் அச்சிடும் பணி, விற்பனை அனைத்தையும் ‘எழுத்து' இயக்கம் பார்த்துkd கொள்ளும். ஏழரைக் கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில், முதல் புத்தக வெளியீட்டின் போது, ஆயிரம் புத்தகங்கள் கூட விற்பனை செய்ய முடிவதில்லை என்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் புத்தகங்கள் வாங்கும் முறையை பகிரங்கமாக வெளியில் சொல்ல முடியாத நிலையில்தான் நிலைமை உள்ளது.
மேலும் தமிழகத்தில், பொறியியல் மற்றும் துறைகள் கல்வி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி மேம்பாட்டிற்கான பள்ளிகள் என சுமார் 13 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தலா 1 புத்தகங்களை வாங்கினால் கூட 13 ஆயிரம் புத்தகங்களை விற்பனை செய்ய முடியும்," என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications