"மறைந்தவர் அமரர் என்பதால் வாஜ்பாய் பற்றி பேசவில்லை": ப.சி-ன் வாய்தவறிய பேச்சு
திருச்சி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி பொதுக்கூட்டத்தில் வாய்தவறி பேசிய பேச்சு இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
திருச்சி புத்தூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாரதிய ஜனதாவையும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மதச்சார்பின்மையைக் காக்க பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நடக்கும் மகாபாரதப் போர் என்றும் கூட வர்ணித்திருக்கிறார்.

அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது ப.சிதம்பரம், நரேந்திர மோடியை மட்டுமல்ல, வாஜ்பாயையும் என்னால் ஏற்க முடியாது. மோடியை விட வாஜ்பாய் நல்லவர், பண்பாளர், நேர்மையானவர் என்பதால் அவரை ஏற்கலாம். மறைந்தவர் அமரர் என்பதால் வாஜ்பாய் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று திடீரென பேசினார்.
ப.சிதம்பரம் வாய்தவறி பேசியிருந்தாலும் ஒருநாட்டின் நிதி அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் முன்னாள் பிரதமர் உயிருடன் இருக்கும் போது மறைந்துவிட்டார் என்று பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications