கார்த்தி கைது குறித்து பேச ப.சிதம்பரம் மறுப்பு
கார்த்தி சிதம்பரத்தின் கைது நடவடிக்கை குறித்து பதில் அளிக்க ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் கைது நடவடிக்கை குறித்து பதில் அளிக்க ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜாராமல் இருந்தார். இதனால் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சென்னையிலிருக்கும் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தார்கள். அதேபோல் அவரது அலுவலக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்து இருக்கிறது.
இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் லண்டனில் இருக்கும் பா.சிதம்பரம் இதுகுறித்து பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.