ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் - விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் - பி.எச். பாண்டியன்
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் கூறியுள்ளார். மும்பை பணக்கார பெண் மரண வழக்கை முன்வைத்து பிஎச் பாண்டியன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலரும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது முதல் மரணம் வரை நடந்த நிகழ்வுகளைப் பற்றி செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மும்பை பணக்கார பெண் ஒருவருக்கு மருத்துவர் மூலம் விஷம் கொடுத்து கொலை செய்தனர். மும்பையில் இருந்து டெல்லிக்கு ரயிலில் வருவதற்குள் அந்த பெண்ணின் உடலில் இருந்த விஷம் ஆவியாகி விடக்கூடியது. இந்த கொலைக்கு சாட்சியில்லை. ஆனாலும் அந்த கொலையை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தது. அதுபோல ஜெயலலிதாவிற்கு நிகழ்ந்திருக்கலாம் என்றும் பி. எச். பாண்டியன் கூறியுள்ளார்.

அதே போல செப்டம்பர் 22ஆம் தேதியன்று சுயநினைவற்ற நிலையில் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அன்றைய தினம் நடந்தது என்ன?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது போயஸ் கார்டனில் இருந்தது யார். போயஸ் கார்டனில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக முழு விசாரணை தேவை என்றும் பி எச் பாண்டியன் கூறினார்.
ஜெயலலிதாவிற்கு இதேபோல மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் பிஎச் பாண்டியன் புகார் கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு சசிகலா விஷம் வைத்து இருக்கலாம் என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் முதல்முறையாக முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் சந்தேகம் கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications