போராட்டம் நடத்துவதில் தவறில்லை- ரஜினிக்கு பா ரஞ்சித் பதில்
சிலவற்றுக்கு போராட்டம் நடத்திதான் உரிமைகளை பெற வேண்டியுள்ளது என்று ரஜினிக்கு பா ரஞ்சித் பதிலடிக் கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: போராட்டம் நடத்துவதில் தவறில்லை என்றும் உரிமைகளை பெற சிலவற்றுக்கு போராட்டம் நடத்திதான் ஆக வேண்டும் என்றும் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திப்பதற்காகவும் ரஜினி தூத்துக்குடிக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போராட்டம் மட்டுமே தீர்வாகாது. எல்லாவற்றிற்கும் போராடுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அதுபோல் சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் போராட்டம் போராட்டம் என்று போராடிக் கொண்டே இருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ரஜினியை வைத்து படம் இயக்கும் பா ரஞ்சித் கூறுகையில் போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல.
போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது. தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்து தெரிவித்துள்ளார் என்றார் பா. ரஞ்சித்.
இவர் ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், நெடுவாசல், மீத்தேன் திட்டம், ஜாதிய படுகொலைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணம் உள்ளார்.












Click it and Unblock the Notifications