ரூ.75 கோடி மோசடி: பச்சமுத்துவை 1 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி
சென்னை: மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி ரூ75 கோடி மோசடி செய்த வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்துவை 1 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி 112 மாணவர்களிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது புகார். இப்புகாரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பச்சமுத்து கை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பச்சமுத்து ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டையில் மனுத்தாக்கல் செய்தார். இதனிடையே பச்சமுத்துவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் பச்சமுத்துவை நாளை 1 நாள் மட்டும் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கொடுத்தது. நாளை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.