தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுறுவல்- மத்திய அரசு எச்சரிக்கை
வேலூர்: தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தமிழக சிபிசிஐடி, எஸ்ஐயு, கியூ பிரிவு ஆகிய பிரிவு போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பின் போதும் வேலூரில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் கிடைத்ததால் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வேலூர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் தமிழக உளவுத்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications