இந்தியக் குடியுரிமையை போலியாகப் பெற்ற பாகிஸ்தான் பெண்- விழுப்புரத்தில் கைது
விழுப்புரம்: தமிழ்நாட்டில் வசிப்பதற்காக போலி ஆவணம் தயாரித்து இந்தியக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பெண் ஒருவர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் காலித் அப்துல்லா. இவர் பாகிஸ்தானில் டிரைவராக பணிபுரிந்த போது, கராச்சியைச் சேர்ந்த ஹவாபீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஹவாபீயை விட்டுவிட்டு 1985இல் காலித் மட்டும் இந்தியா திரும்பியுள்ளார். பின்னர், 1990இல் ஹவாபீ பாகிஸ்தான் குடியுரிமையுடன் இந்தியா வந்து காலித்துடன் வாழ ஆரம்பித்துள்ளார்.
இத்தம்பதியினர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாமந்தலில் குடியேறிய போது, தன்னுடைய பெயரில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை போலியாக பெற்று, ஹவாபீ இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் குடியுரிமையும் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளார்.
ஹவாபீ போலி ஆவணங்கள் தயாரித்து 2 நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹவாபீ மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஹவாபீ கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஒப்படைத்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications