தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த வேண்டும்.. பால் கனகராஜ் கோரிக்கை
கரூர்: தமிழகத்தில் ஊழல் அற்ற அரசு அமைய லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழ் மாநில கட்சியின் நிறுவனத் தலைவர் பால்கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூரில் தமிழ் மாநில கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமன கூட்டம் நிறுவனத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால் கனகராஜ், தமிழகத்தில் கல்வித் திட்டம் சிறப்பானதாக இல்லை. அண்டை மாநிலங்களில் மும்மொழி கல்வி கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது போல் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும்.
குறிப்பாக இந்தி மொழி கற்பதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். விவசாயத்திற்கும் விவசாய கல்வி பயின்றவருக்கும் முன்னுரிமை அளித்து விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும் தேவையான மானியங்களை வழங்க வேண்டும்.
ஊழல் அற்ற அரசு அமைய லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக நடந்த கூட்டத்தில், கருர் மேற்கு மாவட்ட செயலாளராக முருகேசனும், கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜ சேகரும், மண்டல செயலாளராக வீரமணியும் தேர்வு செய்யபட்டனர்.