Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனியில் 2 ஆட்டோ டிரைவர்கள் வெட்டிக் கொலை!

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனியில் ஆட்டோ டிரைவர்களான இரண்டு பேர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பழனி பாரதி நகரை சேர்ந்தவர் உதயகுமார். பழனி அடிவாரம் குரும்பப்பட்டி தெற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் பாலாஜி. நண்பர்களான இவர்கள் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

நேற்று இரவு பாரதி நகரை சேர்ந்த சதீஷ் என்பவருடன் இவர்கள் பழனி அடிவாரம் ரோடு தேவர் சிலை முன்பு தனியார் விடுதியில் உள்ள பாருக்கு சென்றனர். அங்கு 3 பேரும் மதுகுடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனே 3 பேரும் வெளியே வந்து எட்டிப்பார்த்தனர். அந்த சமயம் மர்மநபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் கையில் வீச்சரிவாள் வைத்து இருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் உதயகுமார், பாலாஜி, சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.

உயிர் பிழைக்க அலறியடித்தவாறு ரத்தம் சொட்ட, சொட்ட தலைதெறிக்க அவர்கள் ஓடினர். ஆனாலும் அந்த கொலைவெறி கும்பல் அவர்களை விடவில்லை.

3 பேரையும் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் உதயகுமார், பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். சதீஷ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இந்த இடம் ஆட்கள் நடமாட்டம் மிகுதியான பகுதியாகும். கொலை நடந்த 30 நிமிடத்திற்கு முன்பு தான் இந்த பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்து முடிந்தது. இதனால் பக்தர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

இருட்டில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களும், பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பானது.

தகவல் அறிந்ததும் பழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலையுண்ட 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட உதயகுமாரின் நண்பர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவரை அதே பகுதியை சேர்ந்த துர்க்கையன், பூபாலன், செந்தில் மற்றும் சிலர் கத்தியால் குத்தினர். இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கு விஷயமாக கடந்த 8 மாதமாக நடந்து வரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பூபாலன் தரப்பினர் உதயகுமார், பாலாஜி, சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பூபாலனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+