கேரளாவிலும் வறட்சி நீரின்றி ஆரியங்காவு பாலருவி மூடல்!
வறட்சி காரணமாக தமிழக- கேரளா எல்லையில் உள்ள ஆரியங்காவு பாலருவி மூடப்படுகிறது.
தென்காசி: தமிழக, கேரள எல்லை ஆரியங்காவில் உள்ள சுற்றுலா தளமான பாலருவி தண்ணீர் இன்றி கடந்த 26 ந் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுகிறது. இதனால் இங்கு எப்போதும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்வது வழக்கம். இங்குள்ள வனத்தில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தற்போது போதிய மழை இல்லாததால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் தென்மேற்கு பருவமழைக் காரணமாக 2039.7 மி.மீ. (203.97 சென்டி மீட்டர்) மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் 1352.3 மி.மீ. (135.23 சென்டி மீட்டர்) மழையே பெய்துள்ளது. என்றும் இதனால் கேரளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 34 சதவீத மழை யே பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்ய வில்லை இதனை தொடர்ந்து தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பல்வேறு பகுதிகளிதும் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதே போல கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வருடமாக பெய்ய வேண்டிய பருவமழை பெய்யாததால் வறட்சி நிலவி வருகிறது.
இதனை தொடந்து தமிழக கேரள எல்லை ஆரியங்காவில் உள்ள சுற்றுலா தளமான பாலருவி தண்ணீர் இன்றி கடந்த 26ந் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. வனவிலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். அவை பாலருவியில் விழும் குறைந்தளவு தண்ணீரை குடிக்க அருவி பகுதிக்கு படையெடுத்து வரும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து பாலருவியை மூடியிருப்பதாக கூறப்படுகிறது..
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications