பங்குனி உத்திரம்- வடபழனியில் பக்தர்கள் பால்குடம்- திருச்செந்தூரில் திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.
Recommended Video

சென்னை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.
முருகப்பெருமானுக்கு உகந்த தினமான பங்குனி உத்திரம் இன்று தமிழகம் எங்கும் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே முருகன் ஆலயங்களில் வழிபட்டு வருகின்றனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரையோரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டு முழுவதும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் முக்கிய விழாவாகும்.

சுவாமி, அம்மன் வீதி உலா
இன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் அடுத்து, வள்ளி அம்பாள் தபசுக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி மற்றும் அம்பாள், 'தோள்மாலை மாற்றுதல்' நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து சுவாமி , அம்பாள் ரத வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வள்ளி முருகன் திருக்கல்யாணம்
இரவு 7 மணிக்கு 108 மகா தேவர் சந்நிதி முன்பு, சுவாமி குமரவிடங்கப் பெருமாள் மற்றும் வள்ளி அம்பாளுக்கு கெட்டிமேளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் மாலை அணிந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடற்கரைப் பகுதி, நாழிக்கிணறு பகுதிகளில் பக்தர்கள் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வள்ளியுடன் பூஜை
திருச்செந்தூரில் வில்லேந்திய கோலத்தில் அருளும் குமாரவிடங்கப் பெருமானை, மாப்பிள்ளை ஸ்வாமி என்பார்கள். பங்குனி முதல் புரட்டாசி வரையிலான விழாக்களில் வள்ளியம்மையும், ஐப்பசி முதல் மாசி வரையிலான திருவிழாக்களில் தெய்வானையும் குமாரவிடங்கருடன் எழுந்தருள்கிறார்கள். இத்தகைய நடைமுறையை திருச்செந்தூரில் மட்டுமே காண முடியும்.

பால்குடம் எடுத்த பக்தர்கள்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிய தொடங்கினர். ஆயிரக்கணக்கான பெண்கள் பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அலகு குத்தியும், காவடி சுமந்தும் வந்து நேர்த்தி கடன் செய்தனர். சென்னையில் கந்த கோட்டம், திருப்போரூர் கந்தசாமி ஆலயத்திலும் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications