இந்தியாவைக் காக்கும் பணியில் இதோ ஒரு “ராணுவ கிராமம்” - தமிழகத்தின் பஞ்சம்பட்டி!
திண்டுக்கல்: இந்தியாவின் 69வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு கிராமமே நாட்டு மக்களின் உயிர் காக்க வீட்டிற்கொரு ராணுவ வீரரை நாட்டிற்கு அளிக்கும் மகத்தான பணியினை செய்து வருகின்றது.
திண்டுக்கல்லில் இருந்து 7 கி.மீ தூரத்தில் பஞ்சம்பட்டி கிராமம் அமைந்து உள்ளது. இக்கிராம மக்கள் தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 6530 ஆகும். இக்கிராமத்தில் வீட்டிற்கு குறைந்தது ஒருவர் ராணுவத்தில் உள்ளனர்.

சேவையே லட்சியம்
2ஆம் உலக போரில் இக்கிராமத்தை சேர்ந்த 67 பேர் பங்கேற்றுள்ளனர். நாட்டிற்கு சேவை செய்வது தங்களது லட்சியங்களில் ஒன்று என்கிறாரார்கள் இந்த ஊர்க்காரர்கள்.

நாட்டுபற்று விதை
இந்த ஊரைச் சேர்ந்த சேவியர் என்பவர் 2 ஆம் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்தார். அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றினார். இவர் விடுமுறைக்கு வந்தபோது கிராம மக்களிடம் நாட்டுபற்று பற்றி கூறியிருக்கிறார்.

இளைஞர்களுக்கும் ஆசை:
சிலரை ராணுவத்தில் சேர்க்க அழைத்தும் சென்றார். சுமார் நூறு பேர் இவரால் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் ராணுவவீரர்கள் விடுமுறைக்கு வரும் போது அவர்களை பார்த்து பிற இளைஞர்களும் ராணுவத்தில் சேர்ந்தனர்.

கிராமம் முழுதும் ராணுவ வீரர்கள்:
தற்போது இக்கிராமத்தில் 300 பேர் முன்னாள் ராணுவ வீரராகவும், 300க்கும் அதிகமானோர் ராணுவத்திலும் உள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர் சங்கம்
முன்னாள் ராணுவ வீரர் சங்கமே இந்தக் கிராமத்தில் உள்ளது. இளைஞர்கள் கூட விடுமுறையில் வந்து திருமணத்தை முடித்துவிட்டு 15 நாட்களில் மீண்டும் எல்லைக் காக்க சென்று விடுகின்றனராம். நாமனைவரும் பாதுகாப்பாய் இருக்க தங்களையே அர்ப்பணித்துள்ள இந்த கிராம மக்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications