தமிழ் புத்தாண்டுக்கே வாழ்த்து தெரிவிக்காத, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்!
சென்னை: தமிழ் புத்தாண்டுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்த நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம், வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின், இதுவரை ஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்தார்.

ஆனால், ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்து சென்னையில் வசிக்கும் நிலையில், பன்னீர்செல்வம் வாழ்த்து சொல்வதை தவிர்த்து வருகிறார். அதற்கு பதிலாக ஜெயலலிதாதான் வாழ்த்துகளை கூறி வருகிறார்.
இதேபோலத்தான், தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், நேற்று ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர், தனது மாநில மக்களின் முக்கிய பண்டிகைக்கு வாழ்த்து கூறவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பாகியுள்ளதால், அவர் அதில் இருந்து வெளிவரும்வரை, பன்னீர் செல்வம் சோகத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், சம்மந்தப்பட்ட ஜெயலலிதாவே, வாழ்த்து தெரிவித்த நிலையிலும், பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவிக்காதது வியப்புதான்.












Click it and Unblock the Notifications