என் மகன் இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டார்.. பண்ருட்டி ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

பண்ருட்டி: என் மகன் சம்பத் தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போதைக்கு அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் தீவிர அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மட்டுமே தான் ஓய்வு பெற்றுள்ளதாகவும், அரசியல் சிந்தனைகளிலிருந்து அல்ல என்றும் தன் சக்திக்கேற்ற அளவில் தமிழ் மக்கள், தமிழக முன்னேற்றத்துக்காக பணிகளைத் தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் முன்பு விஜயகாந்த்து ஆலோசகராக இருந்து வழி நடத்தியபோல, வேறு யாருக்காவது அவர் வழிகாட்டியாக மாறத் திட்டமிட்டு வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குல தெய்வம் கோவிலில் வழிபாடு

குல தெய்வம் கோவிலில் வழிபாடு

அரசியலுக்கும், தேமுதிகவுக்கும், எம்.எல்.ஏ பதவிக்கும் முழுக்கு போட்ட பின்னர் பண்ருட்டியை அடுத்துள்ள முத்தாண்டிக்குப்பத்தில் நடந்த உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார் பண்ருட்டி ராமச்சந்திரன். பின்னர் தனது குல தெய்வம் கோவிலுக்கும் போய் வழிபாடு நடத்தினார்.

செயல்பாடுதான் குறையும்.. சிந்தனை அப்படியே

செயல்பாடுதான் குறையும்.. சிந்தனை அப்படியே

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது... அரசியலிருந்து ஓய்வு பெறுவது என்பது எனது செயல்பாட்டை குறைத்து கொள்வதாகும். ஆனால் அதே நேரத்தில் அரசியல் சிந்தனையை குறைத்து கொள்ள போவதில்லை. தமிழ்நாட்டின் நன்மைக்கு பயன்படும் வகையில் என் அறிவுக்கு எட்டிய கருத்துக்கள் மக்களின் முன் வைக்கப்படும்.

சக்திகேற்றபடி செயல்படுவேன்

சக்திகேற்றபடி செயல்படுவேன்

ஓரு அரசியல் இயக்கத்திலிருந்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்க்கிறேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய மாபெரும் தலைவர்கள் தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்நாளை அற்பணித்து பணியாற்றினார்களோ, அதுபோல அவர்களது லட்சிய கனவு நிறைவேறும் வகையில் என் சக்திக்கேற்ற அளவில் பணிகளை தொடருவேன். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நல்வாழ்வு பெற உறுதுணையாக இருப்பேன்.

இப்போதைக்கு மகன் வர மாட்டார்

இப்போதைக்கு மகன் வர மாட்டார்

மேலும் அவர் கூறுகையில், என்னுடைய மகன் சம்பத் தொழிலில் தீவிரமாக இருந்து வருகிறார். இப்போதைக்கு அவர் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 3 அணிகள் வரும்

நாடாளுமன்றத் தேர்தலில் 3 அணிகள் வரும்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3 அணிகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

பாஜகவுடன் சேர திமுக முயற்சிக்கும்

பாஜகவுடன் சேர திமுக முயற்சிக்கும்

அதேபோல தேசிய அளவிலும், தமிழக அளவிலும் பாஜக கூட்டணியில் இடம் பெற திமுக முயற்சிக்கும், கூட்டணிக்கு அது முயலும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+