உடனே மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுங்கள்.. வேல்முருகன்
சென்னை: மக்களைப் பாதிக்கும் வகையிலான மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பது என்பது பொதுமக்களுக்கு மீண்டும் பெரும் சுமையாகும். அண்மையில்தான் பால்விலை மிக அதிக அளவு உயர்த்தப்பட்ட நிலையில் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பதை பொதுமக்களால் ஏற்கமுடியாத ஒன்றாகும்.
வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு தற்போதுள்ள கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ.3 ஆகவும் 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.2.80-ல் இருந்து ரூ.3.25 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.4.-ல் இருந்து ரூ.4.60 ஆகவும் 500 யூனிட்டுக்கு மேல் இரு மாதங்களுக்கு பயன்படுத்து வோருக்கு ரூ.5.75-ல் இருந்து ரூ.6.60ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால்தான் இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதைவிட தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்தின் தேவைக்கான அளவு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்தால் இத்தகைய சுமைகளை மக்கள் மீது சுமத்த வேண்டியது இருக்காது.
அதே நேரத்தில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோரின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்; 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
பொதுமக்கள் மீது பெரும் சுமையாக ஏற்றப்பட்டிருக்கும் இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications