கார் நெல் சாகுபடி- பாபநாசம் அணை இன்று திறப்பு
நெல்லை: கார் நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திறக்கப்படுகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலஙகள் பாசன வசதி பெறும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. நெல்லை மாவட்டததின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தின் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகி்ன்றன. இது போல் தூத்துக்குடி மாவட்டததில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆணடு சீசன் காலத்தில் நல்ல மழை பெய்ததால் நெல் சாகுபடி நன்றாக இருந்தது. கார் பருவ சாகுபடி முடந்தவுடன் பாபநாசம் அணை மூடப்படடது. இந்த நிலையில் இந்தாண்டு கார் பருவ சாகுபடிககாக தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி குறி எழுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை முன் கார் பருவ சாகுபடிக்காக ஒவவொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு பாபநாசம் அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து பொது பணி துறையும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த நிலையில் முன் கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி இன்று 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் 3ம் நம்பர் நேரடி பாசனம், கடம்பாகுளம், ஆத்தூர் குளம், ஆறுமுகமங்கலம்குளம் பாசனததிற்கு உள்பட்ட 8124 ஏக்கர நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications