2 நாட்கள் தொடர் மழை எதிரொலி - நெல்லை அணைகளின் நீர்மட்டம் உயர்வு
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதரத்துக்கு உறுதுணையாக இருப்பது பாபநாசம் அணை ஆகும். பாபநாசம் அணையின் மூலம் நெலலை மாவட்டத்தின் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை மூலம் கார் பருவ சாகுபடியும், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை மூலம் பிசான நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பின.

இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இதில் பாதி நிலங்களில் நெல் அறுவடை முடிநது விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து சராசரியாக 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. அணை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அங்கிருநது தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது பாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு 79.55, சேர்வலாறு அணையில் 92.75, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89.70 அடியாக உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 46 மிமீ, சேர்வலாறு அணை பகுதியில் 27 மி்மீ, மணிமுத்தாறு அணஐப்பகுதியில் 22 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் இந்த வருடம் பிசான நெல் சாகுபடி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications