2000 பேர்.. 5 மாவட்டங்கள்.. டெல்டாவில் எங்கெல்லாம் துணை ராணுவம் களமிறங்கியுள்ளது?
டெல்டாவில் உள்ள 5 மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

திருவாரூர்:டெல்டாவில் உள்ள 5 மாவட்டங்களில் மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மொத்தமாக 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மக்கள் போராட்டம் அடிக்கடி நடக்கும் , விவசாய சங்கங்கள் அதிகம் இருக்கும் திருவாரூர் மாவட்டத்தில்தான் இவர்கள் அதிகம் இருந்தனர்.
திருவாரூரில் மட்டும் சுமார் 1000 ராணுவத்தினர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் மன்னார்குடியிலும், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி போன்ற பகுதியிலும் ராணுவ படை குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் துணை ராணுவம் வந்தது. கேரளா மற்றும் கோவையில் இருந்து இந்த ராணுவம் வந்தது. இவர்கள் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாருர், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று இரவே வந்த இவர்கள், இன்று அதிகாலை பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்த பிரச்சனை பெரிதானத்தை அடுத்து தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறார்கள். படை குவிக்கப்பட்டது, வாபஸ் பெறப்பட்டது எதற்கும் இப்போதுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications