பெண்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும்: இது ராமதாஸ் பேச்சு

அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னை மந்தை வெளியில் நடைபெற்றது. 33 சமுதாய தலைவர்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது, ராமதாஸ் பேசியபோது, ‘இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல. இதில் கலந்து கொண்டுள்ள சமுதாய தலைவர்கள தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை' எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையானவ:
* வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
* காதல் நாடக திருமணங்களால் பெற்றோரும், ஏமாற்றப்படும் இளம் பெண்களும், துயரப்படுகிறார்கள். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த திருமணங்களை செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும்.
என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications