நீங்கள் இல்லாமல் எங்கள் வெற்றி இல்லை... பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 3.02.2016 அன்றும் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 4.02.2016 அன்றும் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர்க் கழகத் தலைவர் சுகுணா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். இரண்டாம் பருவத்தில் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 Parents teachers meeting of Karaikudi school

கல்வித்தரத்தை பெற்றோர்கள் அறியும் பொருட்டு மாணவர் தர அட்டையில் பெற்றோர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மூன்றாவது பருவத்தில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அடுத்த கல்வியாண்டில் பள்ளியில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து பெற்றோர்களுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டில் ஆங்கில பேச்சு பயிற்சி, தையல் பயிற்சி மற்றும் கையெழுத்து பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

 Parents teachers meeting of Karaikudi school

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்களுடன் விவாதிக்கப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி இணைச் செயல்பாடுகள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமைகள் பெற்றோர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

 Parents teachers meeting of Karaikudi school

முடிவில் பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் கோமதி மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்,

தலைமை ஆசிரியருக்கு ரோட்டரி விருது

காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் பட்டய நாள் விழாவும், தொழிற்சார் சேவை விருது வழங்கு விழாவும் சங்கத் தலைவர் டி. சுதர்சன் ஸ்ரீனிவாச் தலைமையில் நடைபெற்றது.

 Parents teachers meeting of Karaikudi school

விழாவில் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைம ஆசிரியர் ஆ. பீட்டர் ராஜா, அரசு மருத்துவமனை செவிலியர் எம். நந்தினி, சிக்ரி விஞ்ஞானி டாக்டர் டி. ஜெயக்குமார், பிவிஎஸ் நர்சரி கார்டன் வீரையா ஆகியோருக்கு தொழிற்சார் சேவை விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

விருதுகளை மண்டலம் 18ன் துணை ஆளுநர் கே. அன்பரசு வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+