சொத்து குவிப்பு வழக்கு: பரிதி இளம்வழுதி விடுதலை

Subscribe to Oneindia Tamil

Parithi Ilamvazhuthi discharged in wealth case
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை விடுதலை செய்து, ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் செய்தித் துறை அமைச்சராக பரிதி இளம் வழுதி இருந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.63 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக, அவர் மீதும், அவர் மனைவி லதா மீதும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த நிலையில், ஊழல் தடுப்பு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி பரிதி இளம்வழுதியும் அவரது மனைவியும் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி விசாரித்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி, அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. பரிதி இளம்வழுதி வங்கியில் கட்டிய கடன் குறித்து எந்த தகவலும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்படவில்லை. அதனால், அவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அதனால் மனுதார்ர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+