ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி செல்லக் கூடாது - சசிகலா குடும்பத்தைத் தாக்கிய ஆனந்தராஜ்
அதிமுக, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் கையில் சென்றுவிடக் கூடாது. எம்ஜிஆர், தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் குடும்பம் ஆட்சியில் தலையிடுவதை விரும்பியது இல்லை என நடிகர் ஆனந்தராஜ் கூறினார்
சென்னை: ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக செல்லக் கூடாது. அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் தன் சக்ரபாணியின் குடும்பம் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அப்போதே அறிவுறுத்தினார் என நடிகர் ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

நடிகர் ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் தற்போது நிலவி வரும் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தைக் குறித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், கட்சியிலும் ஆட்சியிலும் தன் அண்ணன் எம்.ஜி சக்ரபாணி குடும்பத்தாரின் தலையீடு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அப்படி எம்ஜிஆர், குடும்ப தலையீடு இருக்கக் கூடாது என்று பார்த்து வளர்த்தக் கட்சியில் ஒரு குடுய்ம்பத்தின் ஆதிக்கம் தான் இருக்கிறது.
ஒருவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். அவர்கள் குடும்பம்பத்தைச் சேந்ர்த இன்னொருவரே துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். ஆனால், அவர் சொல்கிறார் குடும்பத்தாரின் தலையீடு இருக்காது என்று கூறுகிறார். இனிமேல் குடும்பத்தார் தலையீடு இருப்பதற்கு என்ன இருக்கிறது. இந்த நிலையில் இன்னொருவர் கட்சிக்கு வெளியே இருந்துகொண்டு கட்சியைக் கட்டுப்படுத்தி வருகிறார்'' என்று கூறினார்.
இதன்மூலம் டிடிவி தினகரனின் தலைமையை ஏற்காத பல கோடி அதிமுக தொண்டர்களில், நடிகர் ஆனந்தராஜும் ஒருவர் என்பது புரிந்தது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications