"ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸ்... சல்மான் கான் கேஸ் போல ஆகாமல் இருந்தால் சரி!
சென்னை: சல்மான் கான் கார் விபத்து வழக்கிலிருந்து தப்பித்த கதை போல "ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸும் ஆகி விடாமல் போலீஸார் தீவிரமாக நடந்து கொண்டால் நல்லது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிந்றனர்.
ஐஸ்வர்யா குடிபோதையில் காரை பேய் போல ஓட்டி முனுசாமி என்ற காவலாளியைக் கொன்று தீர்த்து விட்டு இப்போது சிறைக்குப் போய் விட்டார். ஆனால் நாதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த அப்பாவி முனுசாமியின் குடும்பம். இரண்டு குழந்தைகளுடன் முனுசாமியின் மனைவி பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளார். அவருக்கு உதவக் கூட யாரும் வரவில்லையாம்.

திருவான்மியூரைச் சேர்ந்தவர் முனுசாமி. காவலாளியாக பணியாற்றி வந்தார். பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் தனது தோழிகளுடன் ஆடி காரை படு வேகமாக ஓட்டி வந்தார் ஐஸ்வர்யா. குடிபோதையில் அதி வேகமாக வந்த அவர் முனுசாமி மீது மோதி தள்ளி விட்டு போயுள்ளார்.
நடந்த சம்பவத்தை நேரில் பார்த சிலர் தங்களது வாகனங்களில் சேஸ் செய்து ஐஸ்வர்யா காரை துரத்திப் பிடித்து தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது அவரது குடும்பம். அவர் மட்டும்தான் குடும்பத்திற்காக உழைத்து வந்தார். அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் முனுசாமி. ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாராம். உழைத்துக் கொண்டே இருப்பாராம் தனது குடும்பத்திற்காக. வாட்ச்மேன் வேலை, லோடுமேன் வேலை என எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் அவர்.
எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல், தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்று இருந்து வந்துள்ளார். ஆனால் இன்று அவரது குடும்பத்துக்கு உதவிக்குக் கூட யாரும் வராத நிலையாம்.
இப்போது அப்பகுதி மக்களின் ஒரே எதிர்பாப்பு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்., சல்மான் கான் வழக்கு போல இல்லாமல், ஆடி கார் ஐஸ்வர்யா வழக்கை எந்தவிதமான பண நிர்ப்பந்தத்துக்கும் அடி பணியாமல் போலீஸார் தீவிரமாக நடத்தி அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரிடமிருந்து முனுசாமி குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications