"ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸ்... சல்மான் கான் கேஸ் போல ஆகாமல் இருந்தால் சரி!
சென்னை: சல்மான் கான் கார் விபத்து வழக்கிலிருந்து தப்பித்த கதை போல "ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸும் ஆகி விடாமல் போலீஸார் தீவிரமாக நடந்து கொண்டால் நல்லது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிந்றனர்.
ஐஸ்வர்யா குடிபோதையில் காரை பேய் போல ஓட்டி முனுசாமி என்ற காவலாளியைக் கொன்று தீர்த்து விட்டு இப்போது சிறைக்குப் போய் விட்டார். ஆனால் நாதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த அப்பாவி முனுசாமியின் குடும்பம். இரண்டு குழந்தைகளுடன் முனுசாமியின் மனைவி பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளார். அவருக்கு உதவக் கூட யாரும் வரவில்லையாம்.

திருவான்மியூரைச் சேர்ந்தவர் முனுசாமி. காவலாளியாக பணியாற்றி வந்தார். பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் தனது தோழிகளுடன் ஆடி காரை படு வேகமாக ஓட்டி வந்தார் ஐஸ்வர்யா. குடிபோதையில் அதி வேகமாக வந்த அவர் முனுசாமி மீது மோதி தள்ளி விட்டு போயுள்ளார்.
நடந்த சம்பவத்தை நேரில் பார்த சிலர் தங்களது வாகனங்களில் சேஸ் செய்து ஐஸ்வர்யா காரை துரத்திப் பிடித்து தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது அவரது குடும்பம். அவர் மட்டும்தான் குடும்பத்திற்காக உழைத்து வந்தார். அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் முனுசாமி. ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாராம். உழைத்துக் கொண்டே இருப்பாராம் தனது குடும்பத்திற்காக. வாட்ச்மேன் வேலை, லோடுமேன் வேலை என எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் அவர்.
எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல், தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்று இருந்து வந்துள்ளார். ஆனால் இன்று அவரது குடும்பத்துக்கு உதவிக்குக் கூட யாரும் வராத நிலையாம்.
இப்போது அப்பகுதி மக்களின் ஒரே எதிர்பாப்பு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்., சல்மான் கான் வழக்கு போல இல்லாமல், ஆடி கார் ஐஸ்வர்யா வழக்கை எந்தவிதமான பண நிர்ப்பந்தத்துக்கும் அடி பணியாமல் போலீஸார் தீவிரமாக நடத்தி அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரிடமிருந்து முனுசாமி குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications