Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸ்... சல்மான் கான் கேஸ் போல ஆகாமல் இருந்தால் சரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சல்மான் கான் கார் விபத்து வழக்கிலிருந்து தப்பித்த கதை போல "ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸும் ஆகி விடாமல் போலீஸார் தீவிரமாக நடந்து கொண்டால் நல்லது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிந்றனர்.

ஐஸ்வர்யா குடிபோதையில் காரை பேய் போல ஓட்டி முனுசாமி என்ற காவலாளியைக் கொன்று தீர்த்து விட்டு இப்போது சிறைக்குப் போய் விட்டார். ஆனால் நாதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த அப்பாவி முனுசாமியின் குடும்பம். இரண்டு குழந்தைகளுடன் முனுசாமியின் மனைவி பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளார். அவருக்கு உதவக் கூட யாரும் வரவில்லையாம்.

People expect severe punishment to Audi car case Aishwarya

திருவான்மியூரைச் சேர்ந்தவர் முனுசாமி. காவலாளியாக பணியாற்றி வந்தார். பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் தனது தோழிகளுடன் ஆடி காரை படு வேகமாக ஓட்டி வந்தார் ஐஸ்வர்யா. குடிபோதையில் அதி வேகமாக வந்த அவர் முனுசாமி மீது மோதி தள்ளி விட்டு போயுள்ளார்.

நடந்த சம்பவத்தை நேரில் பார்த சிலர் தங்களது வாகனங்களில் சேஸ் செய்து ஐஸ்வர்யா காரை துரத்திப் பிடித்து தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது அவரது குடும்பம். அவர் மட்டும்தான் குடும்பத்திற்காக உழைத்து வந்தார். அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் முனுசாமி. ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டாராம். உழைத்துக் கொண்டே இருப்பாராம் தனது குடும்பத்திற்காக. வாட்ச்மேன் வேலை, லோடுமேன் வேலை என எந்த வேலை கிடைத்தாலும் செய்வாராம் அவர்.

எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல், தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்று இருந்து வந்துள்ளார். ஆனால் இன்று அவரது குடும்பத்துக்கு உதவிக்குக் கூட யாரும் வராத நிலையாம்.

இப்போது அப்பகுதி மக்களின் ஒரே எதிர்பாப்பு அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும்., சல்மான் கான் வழக்கு போல இல்லாமல், ஆடி கார் ஐஸ்வர்யா வழக்கை எந்தவிதமான பண நிர்ப்பந்தத்துக்கும் அடி பணியாமல் போலீஸார் தீவிரமாக நடத்தி அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவரிடமிருந்து முனுசாமி குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+