கருணாநிதியை பார்க்க திருக்குவளையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கிராம மக்கள்
கருணாநிதியை பார்ப்பதற்காக திருக்குவளையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர் கிராம மக்கள்.
Recommended Video

சென்னை: கருணாநிதியை பார்ப்பதற்காக திருக்குவளையிலிருந்து சென்னைக்கு கிராம மக்கள் புறப்பட்டுள்ளனர்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கருணாநிதி குறித்து தவறான வதந்தி பரப்பப்பட்டது.

இதையடுத்து கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை சீரானபோதிலும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை மக்கள் வேதனை அடைந்தனர்.
இதையடுத்து அவரை பார்ப்பதற்காக திருக்குவளையிலிருந்து மக்கள் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அங்கிருந்தபடியே பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திருக்குவளையிலிருந்து நேற்றை தினம் ரத்தினாம்பாள் என்ற மூதாட்டி சென்னை கோபாலபுரத்துக்கு வந்திருந்தார். அங்கு எம்எல்ஏ சேகர் பாபுவின் தலையீட்டின்படி ஸ்டாலினிடம் அழைத்து செல்லப்பட்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications