எங்கயும் எந்த பிரச்சனையும் இல்லை.. அம்மாவின் அரசை பாராட்டுறாங்க... சொல்றாரு அமைச்சர் வைத்தியலிங்கம்
சென்னை: வெள்ளம் பாதித்த சென்னையில் எங்கயும் எந்த பிரச்சனையும் இல்லை... அம்மாவின் அரசை மக்கள் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரமே வெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருந்த மீட்புப் பணிகள் எதையும் மேற்கொள்ளாமல் வெறுங்கையோடு வேடிக்கை பார்க்கப் போனவர் அமைச்சர் வைத்தியலிங்கம். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோபமாக மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா என புராணம்பாடி தப்பினார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் வைத்தியலிங்கம்.
அப்போது செய்தியாளர்கள், அதிமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக கேள்வி எழுப்ப, அதெல்லாம் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் செய்கிற அரசியல் அவதூறு.
எங்கேயும் எந்த பிரச்சனையும் இல்லை... மக்கள் அம்மாவின் அரசை பாராட்டுகிறார்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications