நம்ம உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்குப் பிறகு.. அப்படியே ராகுல் மாதிரியே பேசும் 'கேப்டன்'!
சென்னை: தேமுதிகவின் உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டுக்குப் பிறகு மக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகா்த் அறிக்கை விட்டுள்ளார்.
ஏற்கனவே விஜயகாந்த் கட்சியின் இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து அவர் தெளிவான முடிவை அறிவிக்காததற்காக பல கட்சிகள் கவலையும், அதிருப்தியும் அடைந்துள்ளன.
இந்த நிலையில், எந்தக் கேள்வி கேட்டாலும், எ்ம்பவர்மென்ட், பஞ்சாயத்தி ராஜ், தி சிஸ்டம் என்று சமீபத்தில் டிவி பேட்டியின்போது ராகுல் காந்தி அடிக்கடி பேசி அத்தனை பேரையும் டென்ஷனாக்கியது போல தேமுதிக மாநாட்டால் மக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு வந்து விட்டதாக விஜயகாந்த் கூறியுள்ளார்.
அறிக்கையைப் படியுங்கள்...

வரலாறு காணாத வகையில் கூடினோம்
தேமுதிக சார்பில் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை, எறஞ்சியில் நடத்திய ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் வரலாறு காணாத வகையில் நாம் அனைவரும் ஒன்று கூடினோம்.

விழிப்புணர்வை அதிகரித்துள்ளது
இன்று நம் தேசத்தில் மக்களை பெரிதும் பாதிக்கும் லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றிட உறுதி கொண்டு, 50 லட்சம் தொண்டர்கள் ஒன்று கூடி இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை இன்னும் அதிகரித்து இருக்கிறது.

இருப்பதால்தான் மாநாடு நடத்தினோம்
இன்று நாம் அனைவரும் ஊழலை எதிர்க்கின்ற இடத்தில் இருக்கிற காரணத்தினால் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. ஊழலை ஒழிப்பதற்கான ஆட்சி அதிகாரம் நமது கைகளில் வருகின்றபோது, ஊழலை ஒழித்து மக்களுக்கான நல்லாட்சியை தேமுதிக தரும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்து இருக்கிறது.

எல்லோருக்கும் நன்றி...
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மிக சிறப்பான முறையில் பல லட்சக்கணக்கானவர்களை மாநாட்டில் கலந்துகொள்ள செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications