பாதுகாப்பு இல்லை... குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கிராமம் ஒன்றில் இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது சூரன்விடுதி கிராமம். இங்கு வாழ்ந்து வரும் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே கடந்த சில நாட்களாக தொடர் மோதல் இருந்து வந்நதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லூரி சென்று திரும்பிய ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவர்களை மற்றொரு பிரிவினர் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த மூன்று மாணவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தாக்குதல் நடத்தியவர்களைப் போலீசார் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, இதற்கு கண்டனம் தெரிவித்து ஒருதரப்பினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி, கல்லூரி செல்லம் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டிய அம்மக்கள், அரசு உரிய பாதுகாப்பை வழங்க கோரி தங்கள் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களோடு சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தங்கள் தரப்பு மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்வதோடு உரிய பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் உறுதிபட கூறினர். தொடர்ந்து அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications