பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தது: வீடுகளுக்கு திரும்பும் மக்கள்
சென்னை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துவிட்டதால் மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளில் குடியேற தயாராகி வருகிறார்கள்.
வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்கள், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
சிலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வெள்ளநீரில் மூழ்கி பலியாகினர்.

வெள்ளநீர்
வட சென்னை மற்றும் மத்திய சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துவிட்டது. இந்நிலையில் தென்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் வடிந்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.

வீடுகள்
வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் தற்போது நீர் வடிந்துவிட்டதால் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தயாராகி வருகிறார்கள்.

சுத்தம்
வெள்ளநீர் புகுந்ததால் சகதியும், குப்பையுமாக இருக்கும் வீடுகளை மக்கள் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவி வருகிறார்கள். நீரில் மூழ்கிய பிறகும் நல்ல நிலையில் இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்து சுத்தம் செய்து வருகிறார்கள்.

நந்தம்பாக்கம்
நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். தற்போது நீர் வடிந்துவிட்ட நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

குப்பை
சென்னை நகர சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தன்னார்வலர்கள், அரசு பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications