ராமேஸ்வரத்தில் தொடர் கன மழையால் நெடுஞ்சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ரோடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தேங்கிய நீரை உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் ராமேஸ்வரத்தில் நேற்றுமுன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை 9 மணி வரை இடைவிடாமல் பெய்தது.

தொடர்ச்சியாக பெய்த மழையால் ராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வரை தண்ணீர் முழங்கால் அளவுக்குத் தேங்கியது. தாழ்வான பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகர் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேங்கும் மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே ராமேஸ்வரம் சீதா தீர்த்தம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications