மூடியே கிடக்கும் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் திறப்பது எப்போது? ஈரோடு மக்கள் வேதனை!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் பராமரிப்பின்றி கிடப்பதால் அதனை உடனடியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மக்களை சந்திப்பதற்காக 243 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது. 1996 ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த அலுவலகங்கள் கட்டப்பட்டன.
ஆனால் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அலுவலகத்தை பயன்படுத்துவதே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சி அலுவலகத்தையே பயன்படுத்தி வருகின்றனர். நிர்வாக காரணங்களால் அவ்வாறு செயல்படுவதாக கூறப்பட்டாலும் வாஸ்து காரணங்களுக்காகத்தான் அலுவலகங்களை பயன்படுத்தாமல் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

யாருமே பயன்படுத்துவதில்லை
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தை தவிர மற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பயன்படுத்துவதில்லை. தொகுதி மறு சீரமைப்பில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி என்பதாலும் கே.வி.ராமலிங்கம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது கட்டியது என்பதால் அலுவகத்தை பயன்படுத்தி வருகிறார்.

பாதியிலேயே பறிக்கப்பட்ட பதவி
கிழக்கு தொகுதியில் கடந்த 2001-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எஸ்.தென்னரசு அப்போது அந்த அலுவலகத்தை பயன்படுத்தினார். அடுத்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின்னர் இருந்த என்.கே.கே.பி.ராஜாவுக்கு பாதியிலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அடுத்து தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த தே.மு.தி.க சந்திரகுமார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பயன்படுத்தினார்.ஆனால் தற்போது தி.மு.க.வில் உள்ளார்.

பயன்படுத்தாத அலுவலகம்
இந்த காரணங்களால் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான கே.எஸ்.தென்னரசு காளிங்கராயன் தங்கும் விடுதியின் ஒரு பகுதியை பயன்படுத்தி வருகிறார். இதேபோல் பெருந்துறை, மொடக்குறிச்சி, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அலுவலகத்தை பயன்படுத்துவதில்லை.

செயல்பட நடவடிக்கை தேவை
பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. இதனை பாதுகாக்க வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை பூட்டிகிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications