For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏடிஎம் மையங்களில் அரை மணி நேர இடைவெளியில் 2 முறை பணம் எடுக்க சூப்பர் ஐடியா!

ஏடிஎம் மையங்களில் உடனுக்குடன் பணம் எடுக்க ஒரு புதிய ஐடியாவை பின்பற்றி வருகிறார்கள் பொதுமக்கள்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து ஏடிஎம் மையங்களில் ஒரு கார்டுக்கு ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.2500 மட்டும் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் மையங்களில் நீண்ட கியூ காணப்படுகிறது.

பலர் பணமின்றி வீடு திரும்பியும் உள்ளனர். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும் இரவு பகல் பாராமல் அலைந்து திரிந்து வருகின்றனர்.

People using super idea to get money from the ATMs

வெயிலில் பல மணி நேரம் காத்திருந்து ரூ.2500 எடுத்தாலும், அது அத்தியாவசிய செலவுகளுக்கு போதாத நிலையாக உள்ளது. இதையடுத்து மக்கள், இரண்டு முறை பணம் எடுக்கும் ஐடியாவில் இறங்கியுள்ளனர் பொதுமக்கள்.

இரவு 11.30 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களுக்கு செல்லும் சிலர், முதலில் ரூ.2500 எடுத்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீண்டும் ஒரு ரூ.2500 எடுத்துக்கொள்கிறார்கள். இரவு 12 மணி தாண்டியதும், மறுநாள் கணக்கில் வந்துவிடும் என்பதால் உடனுக்குடன் மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடுகிறது.

English summary
People using a super idea to get back to back money from the ATMs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X