கலாம் அடக்க இடத்தில் குவியும் மக்கள்.. புதிய கூரையின் கீழ் துயில் கொள்ளும் மக்களின் ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதியாக போற்றப்பட்ட அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மக்கள் வருகை சற்றும் குறையவில்லை. தொடர்ந்து பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மழை, வெயிலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த இடத்தில் தற்காலிகமாக கரை போடப்பட்டுள்ளது.

ராமேஸ்ரவம் அருகே பேய்க் கரும்பு என்ற இடத்தில் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திற்குத் தொடர்ந்து கலாமை நேசிப்போர் வந்தவண்ணம் உள்ளனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
24 மணி நேரமும் இந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு பெருமளவில் மாணவ, மாணவியர்தான் வருகின்றனர். இரவு பகல் எப்போது பார்த்தாலும் இங்கு கூட்டம் வருவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications