மக்கள் நலக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது : வைகோ
கோவை: மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை இன்று சென்னையில் தொடங்க உள்ளதாக அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் 5 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, உடுமலைப்பேட்டையில் சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட சங்கரை படுகொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2ஜி முறைகேட்டில் தொடர்பில்லை என கூறி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தப்பித்து கொள்ள முடியாது என்றும், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும், ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிப்பதாகவும் வைகோ விமர்சித்தார்.
மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, மக்கள் நலக் கூட்டணியில் கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். நான்கு கட்சிகள் சார்பில் அந்த அழைப்பை மீண்டும் கூறி திரும்ப அழைத்திருக்கிறோம். இனி முடிவு எடுப்பது அவர் கையில்தான் உள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என்றார்.
இதனிடையே உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவை கோவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications