பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி
பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வந்த பேரறிவானின் தந்தை குயில்தாசன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

26 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் நிலையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.
அதன்பேரில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது பரோல் கடந்த செப்.24-இல் முடிவடைந்த நிலையில் தந்தைக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவரது பரோல் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பேரில் அவரது பரோல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications