For Daily Alerts
Just In
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பாட்டி மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுவிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பேரறிவாளன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் அங்கு தான் வசிக்கிறார்கள். இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை வழி பாட்டியான கண்ணம்மாள்(98) உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு உறவினர்கள், கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும் பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Rajiv Gandhi's assasin Perarivalan's grand mother Kannammal passed away on sunday. She was 98.
Story first published: Sunday, February 23, 2014, 14:40 [IST]