எழுத்தாளர் பெருமாள் முருகன் சென்னை கல்லூரிக்கு மாற்றம்! மனைவிக்கும் டிரான்ஸ்பர்!!
சென்னை: சர்ச்சைக்குரிய மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் சென்னை கல்லூரிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நாவலில் திருச்செங்கோடு மக்களை பற்றி அவதூறு எழுதப்பட்டுள்ளதாக பிரச்சினை வெடித்தது.

நாமக்கல்லில் உள்ள கலை கல்லூரியில் பெருமாள் முருகன் தமிழ்த்துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி எழிலரசியும் அதே கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் பெருமாள் முருகனுக்கும், அவரது மனைவி எழிலரசிக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெருமாள் முருகனை சென்னையில் உள்ள மாநில கல்லூரிக்கும், அவரது மனைவி எழிலரசியை சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கும் பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications