பெருந்துறை அருகே.. லாரி மீது கார் மோதி கணவர், மனைவி பலி.. கதறித் துடித்த மகன்!
கார்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
பெருந்துறை: பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உடல்நசுங்கி உயிரிழந்தனர். தன் கண்முன்னாலேயே பெற்றோர் உயிரிழந்ததை கண்ட மகன் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சென்னையை சேர்ந்தவர்கள் வின்சென்ட் புஷ்பா தம்பதி. இவர்களுடைய மகன் ரிச்சர்டு வயது 30. இவருக்கு சமீபத்தில்தான் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஏஞ்சல் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் சில நாட்களாக ஏஞ்சல் தனது பெற்றோருடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், சரவணம்பட்டியில் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரிச்சர்டு தனது பெற்றோரை சென்னையிலிருந்து காரில் அழைத்து வந்துள்ளார். காரை ரிச்சர்டுதான் ஓட்டியுள்ளார். இன்று காலை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சோளிபாளையம் பிரிவு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் இடதுபுறமாக ஒரு லாரி நின்றது.
திடீரென நிலைதடுமாறி கார் ஓடத் தொடங்கியது. பின்னல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பாகத்தினுள் புகுந்தது. இதனால் காரின் முன்னால் உட்கார்ந்திருந்த வின்சென்ட், பின் சீட்டில் இருந்த புஷ்பாவும் அதே இடத்தில் உடல்நசுங்கி உயிரிழந்தனர்,
ரிச்சர்டு படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், காரின் பாகத்தை வெட்டி எடுத்து இடிபாட்டில் சிக்கி கிடந்த தம்பதியின் உடல்களை மீட்டனர். அப்போது படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ரிச்சர்டு, பெற்றோரின் உடல்களை பார்த்து கதறி கதறி அழுதார். இதையடுத்து போலீசார் அவரை உடனடியாக சிகிச்சைக்காக அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications