நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துக்கள்.. காலா ரிலீசை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் மனு!
காலா படத்தை தடை செய்ய வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ரஜினியின் காலா படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் வியாழனன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு இடையே எதிர்ப்புகளும் உருவாகி வருகின்றன. கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிஜக் காலா என அழைக்கப்படும் திரவியம் நாடாரின் மகன், காலா படத்திற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், இன்று காலா படத்தை தடை செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், "காலா படத்தில் திரவியம் நாடார் மற்றும் நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. படக்குழு அவற்றை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை தேவை" என வழக்கறிஞர் சுரேந்தர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications