மரணத்தில் மர்மம்... சசிபெருமாள் மகன் ஹைகோர்ட்டில் வழக்கு - தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மகன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி வரும் 13ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவர் கடந்த வாரம் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடை ஒன்றை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறிப் போராடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்தார்.

சசிபெருமாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்றும், உடல் நலப் பாதிப்பினால் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் என்றும் வேறுபட்ட தகவல்கள் கூறுகின்றன. ஆனால், செல்போன் கோபுரத்தில் இருந்து சசிபெருமாளை கீழே இறக்கியபோது அவரது சட்டையில் ரத்தம் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. பூரண மதுவிலக்கு குறித்து உறுதி அளித்தால் மட்டுமே சசிபெருமாளின் உடலைப் பெறுவோம் எனக் கூறி அவரது குடும்பத்தார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் தந்தையின் சாவில் மர்மம் உள்ளது. அவரது உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் திருஞானசம்பந்தம் ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் இந்த மனுவுக்கு தமிழ அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றுஉத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications