அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! வாழப்பாடியில் பரபரப்பு
சேலம்: வாழப்பாடி அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலம் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காடு தொகுதியின் இடைத்தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்தலுக்காக சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த விளாரிபாளையம் கிராமத்தில், அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் கணேசனுக்கு சொந்தமான இடத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கீற்று கொட்டகை மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் கீற்று கொட்டகையின் மேல்கூறை முழுவதும் எரிந்து நாசமானது. நள்ளிரவு என்பதால் தீ வைத்த கும்பல் எது என்று தெரியவில்லை.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வாழப்பாடி துணை சூப்பிரண்டு மாதவன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications