கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
கோவை: கோவையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட வீட்டின் உரிமையாளரான ராமநாதன், வடவள்ளி பகுதியில் உள்ள தாயுமானவர் வீதியில் வசித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, கோவையில் உள்ள பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் ராமநாதன் பெயரும் இருந்ததால், அவரின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ராமநாதனை வீட்டின் உள்ளே பாதுகாப்பாக இருக்கச் செய்ததால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 இருபது மணிக்கு நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை வடவள்ளி போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு நடைபெற்று வரும் நிலையில் கோவையில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications