பழனி காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 2 அதிமுகவினர் கைது
பழனி: காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகம் மீது அதிமுக-வினர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வீசியதாக அதிமுக மாணவரணி ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. 5வது நாளாக இன்றும் ஆங்காங்கே ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பழனி அருகே சின்னகலையம்புத்தூர் காங்கிரஸ் தொழிற்சங்க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

தொழிற்சங்க அலுவலகம் வாயிலில் இருந்த கொடி கம்பமும் வெட்டிச் சாய்க்கப்பட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக அதிமுக மாணவர் அணி ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மாணவர் அணி நிர்வாகி சதீஷ், ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications