ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு! மர்ம நபர்கள் யார்? போலீஸ் விசாரணை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடி உள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை காவல் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு, ஒரு 50 அடி தூரம் நடந்து வந்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் முகமூடி அணிந்து இருந்தனர். திடீரென தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து காவல் நிலையத்தின் மீது வீசினர். பின்னர் அங்கிருந்து வேகமாக ஓடி, மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதன்பேரில் உயர் அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு வந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து காவல் நிலையம் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் முகமூடி அணிந்தபடி வந்த இரண்டு பேர் தான் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
முகமூடி அணிந்து வந்த நபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர்? என்பது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் வியாபாரிகளை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலால் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications